சென்னை: ஒரு வாரமாக நீடித்த ஆசிரியர்கள் போராட்டம்: திடீர் கைது

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
திடீர் கைது

திடீர் கைது

சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கையை முன்வைத்து கடந்த 7 நாட்களாக ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதுபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேரம் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து  ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு  பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: