Advertisment

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு; ரவுடி கருக்கா வினோத் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ராஜ்பவன் வாயில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பாய்ந்தது குண்டாஸ்; ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது; சென்னை கமிஷ்னர் நடவடிக்கை

author-image
WebDesk
New Update
Karukka Vinod who threw petrol bombs on Governors House

ராஜ்பவன் வாயில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மீது பாய்ந்தது குண்டாஸ்; ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது; சென்னை கமிஷ்னர் நடவடிக்கை

கடந்த மாதம் சென்னை ராஜ்பவன் வாயில் அருகே 2 பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய கருக்காவினோத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன் கடந்த மாதம் 25-ம் தேதி மதியம் 3 மணிக்கு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசியவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தப்போது, அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் எனத் தெரியவந்தது. இதனையடுத்து பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கிண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கருக்கா வினோத் போலீஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த விசாரணையில், ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர் கதையானதால் மன உளைச்சல் அடைந்தேன். எனது மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட்தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான்? எனவேதான் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற கோபத்தில் பா.ஜ.க அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன். தற்போது ஆளுநர் மாளிகை முன் வீசி உள்ளேன்என்று கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பிணையில் வெளிவர இயலாத சூழல் உருவாகியுள்ளது, கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பரிந்துரை செய்தார்.

முன்னதாக, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திர குற்றவாளி என்று காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் மீது இந்த வழக்கையும் சேர்த்து 14 வழக்குகள் உள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Raj Bhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment