Advertisment

வெள்ள பாதிப்பு: படகில் சென்று ஆய்வு செய்த சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வேளச்சேரி, டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
New Update
Sandeep roy rathore

படகில் சென்று ஆய்வு செய்த சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர்

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் மழைநீ தேங்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வேளச்சேரி டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று  ஆய்வு செய்தார். மேலும், ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உடனே உதவி செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், வேளச்சேரி டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் படகில் சென்று  புதன்கிழமை ஆய்வு செய்தார். மேலும், ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உடனே உதவி செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2345 - 2359, 2345 - 2360, 2345 - 2361, 2345 - 2377 மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை எண் 2345 - 2437 என்ற உதவி எண்களை அழைக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment