Advertisment

டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்தேன், ஆதாரம் உள்ளது; காவலர் ஆறுமுக பாண்டியன் பேட்டி

காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது; டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்தேன் – காவலர் ஆறுமுக பாண்டியன் பேட்டி

author-image
WebDesk
New Update
Annamalai question regarding denial of free travel to police by bus

காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது – காவலர் ஆறுமுக பாண்டியன் பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து தான் பயணம் மேற்கொண்டதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டியன் தெரிவித்துள்ளார். 

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப் படை காவலர் ஆறுமுக பாண்டியன், டிக்கெட் எடுக்க மாட்டேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து துறை ரீதியான விசாரணைக்கு சென்னை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனிவாசன் முன்பு ஆறுமுக பாண்டியன் ஆஜரானார். அப்போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி அவரை மீட்டு காவலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து ஆறுமுக பாண்டியன் வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆறுமுக பாண்டியன், “அரசு பேருந்தில் நான் இலவசமாக பயணம் செய்யவில்லை. டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bus Tamilnadu police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment