பெரியார் குறித்து சர்ச்சை கருத்து : கனல் கண்ணன் கைது ஆவாரா?

கனல் கண்ணனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் போலீசாரை குவித்துள்ளனர்

கனல் கண்ணனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் போலீசாரை குவித்துள்ளனர்

author-image
WebDesk
New Update
பெரியார் குறித்து சர்ச்சை கருத்து : கனல் கண்ணன் கைது ஆவாரா?

பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை பேசிய சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் சமூக வலைதளங்களில பல்வேறு பதிவுகள் பதிவிடப்பட்டு வரும் நிலையில், சினிமா மற்றும் அரசியல் சார்ந்த பல பிரபலங்கள் பொது இடம் அல்லது தங்களது சமூக வலைதளங்களில் இது போன்ற கருத்துக்களை பேசி வருவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்துள்ளகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் நுழைவு விழா சென்னை மதுரவாயில் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சினிமா நடிகரும் ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் பேசுகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லடசக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் கோவிலுக்கு உள்ளே சொல்லும்போதும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் (பெரியார்) சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார்.  

Advertisment
Advertisements

கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடருக்கு அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் வன்முறை மற்றும் கவலரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில், கனல் கண்ணனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான 3 இடங்களில் போலீசாரை குவித்துள்ள நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரடங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: