New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/29/ypsZRD690ruqvREhYuic.jpg)
சென்னையில் 200 இடங்களில் ரோபோட்டிக் காப்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் என்ற சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 200 இடங்களில் ரோபோட்டிக் காப்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!
200 ROBOTIC COPS to Hit Chennai Streets—A New Era of Law Enforcement Begins! (1/6) pic.twitter.com/NgwKAwRcrx
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) April 28, 2025
பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சென்னை மாநகர போலீசார் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது “ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்” (Red Button Robotic COP) என்கிற ரோபோ போலீஸ் இயந்திரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்படவுள்ளன. இதனால் பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், தைரியமாக வெளியே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிட்டது. பாலியல் சீண்டல்கள், பலாத்காரம் மட்டுமல்லாமல், காதலை ஏற்க மறுத்தால் கொலை செய்வது, ஆசிட் வீசுவது போன்ற குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதன்காரணமாக, பெரும்பாலான பெண் பிள்ளைகளும், அவர்களின் பெற்றோர்களும் அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், குற்ற நிகழ்வுகள் அரங்கேறும் பகுதிகளிலும் அவசர காவல் உதவிக்காக, 'ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்' என்ற பாதுகாப்பு ரோபோ இயந்திரங்களை, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் 200 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகரகாவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில், 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இந்த பாதுகாப்பு சாதனம் 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் அலைசி ஆராயும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருப்பவரோ (அ) அவருக்கு அருகில் உள்ள நபரோ அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் ரோந்துப் பணியில் உள்ள காவலர்களை எச்சரிக்கைப்படுத்தவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தில் உள்ளவர்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வீடியோ கால் மூலம் நிலை அறிந்து கொள்ளவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 200 பாதுகாப்பு சாதனங்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.