/tamil-ie/media/media_files/uploads/2023/01/Ganja-chocolates-Chennai.jpg)
சென்னையில் உள்ள பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா சாக்லேட் விற்ற பீகாரைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்தனர்.
மாம்பலம் பள்ளி அருகே சுரேந்திரன் யாதவ் (வயது 43) என்பவரை கைது செய்ததாகவும், சுமார் 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் அவற்றை விற்பனை செய்ய பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்தனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட சுரேந்திரன், ராயப்பேட்டை அருகே அவரது மாமா அமுல் குமார் யாதவ் நடத்தி வரும் பான் கடையில் வேலை பார்த்து வந்ததாக காவல்துறை தெரிவித்தனர். பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்ட “கஞ்சா சாக்லேட்டுகள்” அவரிடம் கிடைத்தது, தலைமறைவாக உள்ள அமுல் குமார் யாதவை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.
கஞ்சா விற்பனையைக் குறைக்க காவல்துறை இயக்குநர் சி சைலேந்திர பாபு கஞ்சா வேட்டையைத் தொடங்கிய பிறகு, 17,000 க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்துறைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் உயர் அதிகாரிகளுடன், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையை தடுக்க, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற அனைவரையும் வலியுறுத்திய ஸ்டாலின், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் கஞ்சா விற்பனை நடைபெறவில்லை என புகார் அளிக்க அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.