/indian-express-tamil/media/media_files/2025/02/18/TPLLkkgIcxMuwYV2kcjH.jpg)
போதைப்பொருள் கடத்தியதாக 7 இளைஞர்கள் கைது
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஐடி ஊழியர்கள் மற்றும் பிபிஓ ஊழியர்கள் உட்பட ஏழு இளைஞர்களை நகர காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு (ஏ.என்.ஐ.யு) கைது செய்தது.
மாதவரம் லாரி முனையம் அருகே செயற்கை போதைப்பொருள் நடமாட்டம் குறித்து ஏ.என்.ஐ.யு குழுவுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாதவரம் போலீசாருடன் இணைந்து சந்தேகத்தின் பேரில் 7 பேர் கொண்ட இளைஞர் குழுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர்களை அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததை கண்டறிந்து கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த ஜி.அஜய் (26), பள்ளிக்கரணையை சேர்ந்த எஸ்.ராகுல் (26), எஸ்.முத்துராஜன் (29), பாடியை சேர்ந்த யு.நிஸ்டல் (27), மண்ணடியை சேர்ந்த என்.ஷமிம் பிர்தௌஸ் (31), பல்லாவரம் பகுதியை சேர்ந்த எம்.புருஷோத்தமன் (23), வேளச்சேரியை சேர்ந்த கே.சதீஷ்குமார் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் அஜய் கார் ஷோரூமில் பணிபுரிகிறார், சதீஷ் குமார் மற்றும் முத்துராஜன் ஒரு ஐடி நிறுவனத்திலும், மற்றவர்கள் கால் சென்டரிலும் பணிபுரிகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். நகர காவல்துறையின் சமீபத்தில் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் நகர பகுதிகளில் செயற்கை போதைப்பொருள் கடத்தல் குழுவினரை பிடித்தும் பல கடத்தல் நெட்வொர்க்குகளை முடக்கியும் வருகிறது.
மிக சமீபத்தில், சென்னை மருத்துவக் கல்லூரியின் மூன்று முதுகலை மருத்துவ மாணவர்கள் தங்கள் விடுதி அறையில் இருந்து கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததை அடுத்து மார்ச் 10 கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம், ஏ.என்.ஐ.யு குழு நகரின் பல்வேறு பகுதிகளில் மெத்தபெட்டமைன் வைத்திருந்ததற்காக மூன்று நாட்களில் 20 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.