Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
மாதவரம் பகுதி : சிஎம்டிஏ டிரக் டெர்மினல் மற்றும் ஜிஎன்டி சாலை
கே.கே.நகர் பகுதி : கே,கே.நகர், அசோக் நகர், எம்ஜிஆர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம் ஒரு பகுதி, பிருந்தாவன் எக்ஸ்டென்சன், கிண்டி ஒரு பகுதி, நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம் ஒரு பகுதி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 16ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.