Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் ஆவடி பகுதியில் அக்டோபர் 3ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் ஆவடி காமராஜ் நகர் பகுதிகளான காமராஜ் நகர், என்,எம்.சாலை, ஆவடி ஹவுசிங் போர்டு பகுதி, வசந்தம் நகர், கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு, கண்ணபாளையம், ஆவடி பூந்தமல்லி சாலை, ஆவடி மார்க்கெட், குமரன் நகர், பெரியார் நகர், ஆனந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 3ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.