Power Shutdown in Chennai: பராமரிப்பு பணிகள் காரணமாக, செப்டம்பர் 12ம் தேதி, சென்னையின் அடையார், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னையின் கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் தடைபடும் பகுதிகள்
மாங்காடு பகுதி : மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரங்குநாதபுரம், கொல்லுமணிவாக்கம், சிவன்தாங்கல், சிக்காரபாளையம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாசா நகர், நெல்லிதோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், சாதிக் நகர், சக்தி நகர், கேகே நகர், மேல்மா நகர்.
திருமங்கலம் பகுதி : சத்யசாய் நகர், மெட்ரோ ஜோன், வி,ஆர். ஷாப்பிங் மால், கோல்டன் ஜூப்ளி பிளாட்ஸ், அம்பேத்கர் நகர், பாலாஜி நகர்
அடையார் இந்திரா நகர் பகுதி : சீனிவாசமூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமாச்சாரி அவென்யூ, கேபி நகர் முதல் தெரு, எல்பி சாலை ஒருபகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ
மணலி சாத்தங்காடு பகுதி : காமராஜ் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவேட்டம்மன் தெரு, பால்ஜிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 12ம் தேதி) மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.