Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 20ம் தேதி) கோயம்பேடு, மாதவரம், வேளச்சேரி, புழல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்டம்பர் 20ம் தேதி, கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
ராஜா அண்ணாமலைபுரம் : ராஜா அண்ணாமலை புரம் பகுதியின் பெரும்பாலான பகுதிகள், கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டன், பாக்யரதி தெரு, விஸ்வநாதன் தெரு, காமராஜர் சாலை, சேமியர்ஸ் சாலை, போட் கிளப் ஹவுஸ் ரோடு, சத்ய நாராயணா அவென்யூ, கிரசன்ட் அவென்யூ, செயின்ட் மேரீஸ் சாலை, படவேட்டம்மன் தெரு, திருவேங்கடம் தெரு, அடையார் கிளப் கேட் ரோடு, கேசவ பெருமாள் புரம், இளங்கோ தெரு உள்ளிட்ட பகுதிகள்.
கோயம்பேடு பகுதி : ஆதிநாத் குடோன், நடராஜ் நகர், குரு ராகவேந்திரா நகர், சீனிவாசா நகர், சாந்தி காலனி உள்ளிட்ட பகுதிகள்
மாதவரம் : லெதர் எஸ்டேட், ஜம்புலி காலனி, கேகேஆர் டவுன், கேகேஆர் கார்டன், ரவி கார்டன் . அலெக்ஸ் பகர், மேதா நகர், பத்மாவதி நகர், லோகாம்பாள் நகர், சிட்டினெஸட் பாஷ்யம் நகர், சுப்பிரமணி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
வேளச்சேரி : பழைய தரமணி, மகாத்மா காந்தி நகர், அன்பழகன் நகர், திருவள்ளுவர் சாலை, நடராஜன் தெரு, சீதாபதி நகர், காந்தி சாலை, திருவீதியம்மன் கோவில் தெரு, வெள்ளாளர் தெரு.
புழல் : நாகப்பா எஸ்டேட், எம்ஜிஆர் நகர், புழல், அண்ணா நினைவு நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.