Power Cut Electricity Shutdown in Chennai: மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ராமாபுரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 27ம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை ( செப்டம்பர் 27ம் தேதி) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
போரூர் : விக்னேஸ்வரா நகர், லட்சுமி நகர், ஹிமாச்சல் நகர், பொன்னி நகர், சந்தோஷ் நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, சுப்பையா நகர், ராமச்சந்திரா நகர், சிவாஜி நகர், அன்னை வேளாங்கன்னி நகர், மாதா நகர், பாலாஜி பகர், விஜயலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள்
ராமாபுரம் : தமிழ் நகர், சபரி நகர், சாந்தி நகர், ஆனந்தம் நகர், குறிஞ்சி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, நாயுடு தெரு, கம்பர் சாலை, பாலாம்பிகை நகர், அம்பாள் நகர்
வேளச்சேரி கிழக்கு : தரமணி 100 அடி சாலை, நியூ காலனி, சீதாபதி நகர், கோகுலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.