Advertisment

ரயிலில் தவறி விழுந்து கர்ப்பிணிப் பெண் கஸ்தூரி மரணம்: அபாயச் சங்கிலி இயங்காதது பற்றி விசாரிக்க உத்தரவு

உடனடியாக அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாமல் இருந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kollam rail

Chennai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விருத்தாச்சலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண், தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதாக இருந்தது.

இதற்காக கஸ்தூரி, உறவினர்களுடன் சென்னையில் இருந்து செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார்.

இரவு 8 மணியளவில் ரயில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். படிக்கட்டு அருகே வாந்தி எடுத்தபடி நின்று கொண்டிருந்த போது, கஸ்தூரி எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாமல் இருந்துள்ளது.  இதனால் அவசரத்துக்கு ரயிலில் இருந்து குதிக்க உறவினர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அவர்களை தடுத்த ரயில்வே போலீசார் அருகிலிருந்த இன்னொரு பெட்டிக்கு சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனால் அதற்குள் ரயில் 8 கி.மீ. தூரம் கடந்து விட்டது.

தொடர்ந்து ரயில் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி வந்து, இருள் சூழ்ந்த பகுதியில் கஸ்தூரியை தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் ரயில் மீண்டும் புறப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளது. அங்கு இறங்கிய குடும்பத்தினர், ரயில்வே போலீசாரிடம் கஸ்தூரியை கண்டுபிடித்து தருமாறு கதறி அழுதனர்.  

இதைத் தொடர்ந்து போலீசார், விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ மாம்பாக்கத்தில் கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

உடனடியாக அவரது உடலை மீட்ட ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும், அபாய சங்கில் செயல்படாத புகார் குறித்து விசாரிக்கவும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இது குறித்து விசாரணை நடத்த திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணனுக்கு இருப்புப்பாதை போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment