New Update
00:00
/ 00:00
சென்னை ஆழ்வார்பேட்டையில் கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னை – ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த செக்மெட் பார் என்ற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை நேற்று மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.15 மணி அளவில் அவசர அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் செக்மெட் பாரின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாரின் ஒரு பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ், லில்லி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சைக்ளோம் ராஜ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணிகளின் அதிர்வால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.