சென்னை மக்களே தவறவிடாதீர்கள்! குடும்ப அட்டை சேவைகள் பெற அக். 11-ல் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

சென்னை மக்களே உக்கள் குடும்ப அட்டைகளில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் செய்ய என குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாக மேற்கொள்ள பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் அக்டோபர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை மக்களே உக்கள் குடும்ப அட்டைகளில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் செய்ய என குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாக மேற்கொள்ள பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் அக்டோபர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
ration shop and card

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகிற அக்டோபர் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. Photograph: (Representational Image)

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகிற அக்டோபர் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. 

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைக்களில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைபாடுகளை விரைவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Advertisment
Advertisements

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ration Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: