டான் படத்தை பார்த்து மகிழ்ந்த புளியந்தோப்பு போலீஸ் பாய்ஸ்: உற்சாக கொண்டாட்டம்

புளியந்தோப்பு காவல் மாவட்ட சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் பொருட்டு காவல்துறையினர் திரையரங்குக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு டான் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

புளியந்தோப்பு காவல் மாவட்ட சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் பொருட்டு காவல்துறையினர் திரையரங்குக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு டான் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டான் படத்தை பார்த்து மகிழ்ந்த புளியந்தோப்பு போலீஸ் பாய்ஸ்: உற்சாக கொண்டாட்டம்

புளியந்தோப்பு காவல் மாவட்ட சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் பொருட்டு காவல்துறையினர் திரையரங்குக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு டான் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

Advertisment

சென்னை, புளியந்தோப்பு துணை ஆணையர் ஐ.ஈஸ்வரன் தலைமையில், புளியந்தோப்பு காவல் மாவட்ட சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர்களை மகிழ்விக்கும் பொருட்டு திரையரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மேற்பார்வை அதிகாரி எஸ். ராஜேஸ்வரி இணை ஆணையர் (மேற்கு மண்டலம்) மேற்பார்வையில், சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் சிறுவர், சிறுமியர்களை ஊக்குவிப்பதற்காக இரயில் பயணம், கப்பல் மற்றும் காவல் அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஐ.ஈஸ்வரன் தலைமையில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு, எம்.கே.பி.நகர் மற்றும் செம்பியம் சரகத்திலுள்ள காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த 150 சிறுவர், சிறுமியர் வியாழக்கிழமை பெரம்பூரிலுள்ள பிருந்தா திரையரங்கம் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு டான் திரைப்படம் சிறப்பு காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், படிப்பில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பாத சூழ்நிலை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் பிற இணை பாடத்திட்டம், பாடங்களைத் தாண்டிய செயல்பாடுகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அளிக்ப்படுகிறது. போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலைப்புச் செய்திளில் இடம் பெற்று வருகின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், அவர்களை சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக மாற்றவும், பெருநகர் சென்னை போலீசார், மாநகரம் முழுவதும் உள்ள போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் கிளப் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தி வருகின்றனர்.

படிப்பில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பாத சூழ்நிலை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் பிற இணை பாடத்திட்டம், பாடங்களைத் தாண்டிய செயல்பாடுகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள். போலீஸ் சிறுவர் மற்றும் பெண்கள் கிளப் மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலைப்புச் செய்திகளாகி வருகின்றனர்.

இருப்பினும், இந்த அமைப்பு மிகவும் கடினமானதாகவோ அல்லது சாதாரணமாகவோ இருப்பதை காவல்துறை விரும்பவில்லை. இந்த அமைப்பில், சில பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்துள்ளனர். புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சிறார்களை சமீபத்தில் திரையரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு டான் திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: