தமிழகத்தில் சென்னையில் “சென்னையில் இன்றும் (18.12.2024) நாளையும் (19.12.2024) மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில் உள்ளது.” என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தின் பதிவில் தெரிவிக்கையில், “இன்றும் (18.12.2024) நாளையும் (19.12.2024) மழை பெய்யும் - சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவுகளில் ஒன்றைக் கொடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்த அப்டேட் - டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை பெல்ட் (சென்னை)-யில் மழை பெய்யும். சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும்” என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Enjoy the rains today and tomorrow - TWM update on the low pressure which gave one of the coldest nights for Chennai - 18 and 19 are the best day for rains in KTCC (Chennai), if any. Clouds are almost 50 kms off Chennai coast and Moderate rains should start in the next 1-2 hours.… pic.twitter.com/gEWFSOVPce
— Tamil Nadu Weatherman (@praddy06) December 18, 2024
மேலும், “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை (KTCC) பெல்ட் கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது. இதில் சென்னையில் இரவுகளில் குளிர் கொண்டுவந்த பிறகு, இன்று ஈரப்பதம் உள்நோக்கி நகர்ந்து சிறிது வெப்பத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது, ஆனால், மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில் உள்ளது.” என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கே.டி.சி.சி சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “கே.டி.சி.சி (சென்னை) - இன்றும் (18.12.2024) நாளையும் (19.12.2024) சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அடுத்த சில மணிநேரங்களில் மிதமான மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும். அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தவறாமல் செல்லலாம். இதுவே கடைசி மழையாக இருக்குமா? என்றால் இல்லை. கிறிஸ்மஸுக்குப் பிறகு, 26-27 மிதமான மழை பெய்யும் கிழக்கு அலை (பள்ளம்) இருக்கும், ஆனால், இன்றும் நாளையும் சென்னைக்கு மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது, ஏராளமான குடிநீரைக் கொடுத்த இந்த பருவமழையை அனுபவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மழை பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்து பிரதீப் ஜான் குறிப்பிடுகையில், “1. இந்த மழையால் நீங்கள் பயப்பட வேண்டுமா, இல்லை என்பதே பதில்.
2. யூடியூப்பில் அரக்கன் வரான் என்கிற மழை பற்றிய பீதியான வீடியோக்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.
3. அணைகள் நிரம்பியிருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டுமா என்றால் இல்லை என்பதே பதில். நல்ல தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
டெல்டா, விழுப்புரம் கடற்கரை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக குமரியில் மட்டும் ஓரளவு மழை பெய்யும். பொதுவாக இந்த மழை கே.டி.டி.சி பெல்ட்டில் மட்டுமே இருக்கும், அநேகமாக ராணிப்பேட்டையிலும் கொஞ்சம் மழை பெய்யலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் அங்கே மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிடுகையில், “அடுத்த 1-2 மணி நேரத்தில் பாரிய புயல்கள் கப்பாவை நோக்கி நகரும், அதன் பிறகு போட்டி மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை. அதுவே போட்டியின் முடிவாக இருக்கும் - டிராவில் முடியும் மற்றும் ஆட்ட நாயகன் விருது மழைக்குச் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.