/tamil-ie/media/media_files/uploads/2019/09/z2040.jpg)
Tamil Nadu news today in tamil
Chennai Rain News Today : தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல், நேற்று நள்ளிரவும் சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.
Chennai Weather Today
வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதேசமயம், செப்.22ம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் செப்.23ம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.