இந்த 9 மாவட்டங்களில் இன்று கன மழை: வேலூரில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று (செப்.21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று (செப்.21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Rain in Tamilnadu

9 districts in Tamil Nadu to get heavy rainfall

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதேபோல் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (செப்.21) விடுமுறை அளிக்கப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இதனிடையே திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: