Advertisment

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: ஜூலை 12-க்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: ஜூலை 12-க்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலம் கையகப்படுத்த ஆட்சேபனைகள் வரவேற்று 21 நாட்கள் அவகாசம் வழங்கி இருந்த போதிலும் நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரபடுத்தி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலை சட்ட விதிகளின் படி நிலம் கையகபடுத்தும் போது பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற விதியை ரத்து செய்ய வேண்டும். சமூக மதிப்பீட்டின் படி சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், சேஷாசயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலை உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் போது, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு சட்டப்பிரிவு 105 ன் படி சமூக பாதிப்பு குறித்த ஆய்வு மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு நடைமுறைகள் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டப்பரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து உதவிகளும் இந்த சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நில உரிமையாளர்களுக்கு , நிலத்தின் சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதாகவும் பல நில உரிமையாளர் தாமாகவே விரும்பி நிலத்தை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுவுக்கு ஜூலை 12 ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment