New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/image-54.jpg)
தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பொது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கி, நோய் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்
சென்னை வடசென்னை சத்யா நகர் பகுதியில் நேற்று அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த கொரோனா நிவாரணம் வழங்கும் விழாவில், சமூக விலகல் கேள்விக்குறியாக்கப் பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையிலான மத்தியக் குழு சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவித்த காரணத்தால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக சென்னையில் பல பகுதிகளில் மக்கள் நேற்று வெள்ளம் போல் குவிந்தனர். இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடைபிடிக்கப்பட்டு வந்த சமூக விலகல் கேலிக் கூத்தானது. அரசின் முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கேள்வியை எழுப்பத் தொடங்கினர்.
இதற்கிடையே, வடசென்னை சத்யா நகர் பகுதியில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு தற்போது பேசும் பொருளாகி வருகிறது.
சென்னையில் வடசென்னை பகுதி கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக கருதப்படுகிறது. எந்தவித சிகிச்சை மருந்தும் இல்லாத நிலையில், கொரோனா தடுப்பு நடவடிகையில் சமூக விலகல் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
சென்னை சத்யா நகரில், அதிமுக நிர்வாகிகள் நடத்திய கொரோனா நிவாரணம் வழங்கும் விழாவில் சமூக விலகல் கேள்விக்குறியாக்கப் பட்டது. #chennailockdown #admk pic.twitter.com/P1jcdWLLKC
— IE Tamil (@IeTamil) April 26, 2020
மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களை, தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நேரடியாக வழங்குவது, தடையுத்தரவை மீறும் செயலாகும். இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கை, நோய் தொற்று பரவ வழிவகுக்கும். எனவே, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கி, நோய் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால், சத்யா நகரில் நேற்று ஏற்பட்ட நிகழ்வை பார்க்கும்போது, முதல்வரின் வார்த்தைகளை, அவர் சார்ந்த கட்சி நிர்வாகிகள் கூட முழுமையாக கடைபிடிக்க வில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
சென்னை சத்யா நகரில், அதிமுக நிர்வாகிகள் நடத்திய கொரோனா நிவாரணம் வழங்கும் விழாவில் சமூக விலகல் கேள்விக்குறியாக்கப் பட்டது (2/3)#chennailockdown #ADMK pic.twitter.com/9Hzdd29oa5
— IE Tamil (@IeTamil) April 26, 2020
ஊரடங்கில் தளர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு மே மாதம் மூன்றாம் தேதிக்குப் பின் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சமிபத்திய நாட்களாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று அதிகமாக பதிவு செய்யப் பட்டு வருவதையும் நாம் காண்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.