Advertisment

சென்னையில் மழை நீருக்காக ஒதுங்கிய சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இசை ஆசிரியர் போக்சோவில் கைது

சென்னையில் வீட்டில் மழைநீர் புகுந்ததால் மாடியில் இருக்கும் அறையில் தற்காலிகமாக தங்கச் சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இசை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Chennai Sexual molestation to 11 year old girl Music teacher arrested under POCSO Act Tamil News

கண் கலங்க பெற்றோரிடம் வந்த சிறுமி, இசை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மழைநீர் புகுந்தது. தரை தளத்தில் வசிக்கும் குடும்பத்தினரின் இல்லத்தை மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாடியில் காலியாக இருக்கும் ஒரு அறையில் சென்று தங்குமாறு கட்டட உரிமையாளர் தெரிவித்தார். 

Advertisment

அந்த அறையை தரை தளத்தில் வசித்த குடும்பத்தினர் தங்கள் 11 வயது மகளான சிறுமியுடன் சேர்ந்து சுத்தம் செய்யும்போது, அதற்கு அடுத்த அறையில் குடியிருந்த இசை ஆசிரியர் சுரேந்தர் (45) அங்கு வந்துள்ளார். சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த அவர் தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று இசைக்கருவிகளை காண்பிடித்துள்ளார். 

காலியாக இருக்கும் அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த பெற்றோர், ‘பக்கத்து வீட்டில் இருக்கும் இசை ஆசிரியரிடம் தானே சிறுமி பேசிக்கொண்டிருக்கிறார்’ என எண்ணி சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் கண் கலங்க பெற்றோரிடம் வந்த சிறுமி, இசை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அச்சத்துடன் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீஸார், இசை ஆசிரியர் சுரேந்தரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: சக்தி சரவணன் - சென்னை 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment