Advertisment

சென்னை ஹயாத் ஹோட்டலில் 24 பேருக்கு கொரோனா: ‘லிப்ட்’கள் சீல் வைப்பு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபலமான ஹயாத் ரிஜென்ஸி நட்சத்திர ஹோட்டலில் 24 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஊழியர்கள் பயன்படுத்திய ‘லிஃப்ட்’கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai Covid-19 News

chennai Covid-19 News

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹயாத் ரிஜென்ஸி நட்சத்திர ஹோட்டலில் 24 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹோட்டலில் ஊழியர்கள் பயன்படுத்திய ‘லிஃப்ட்’கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹயாத் ரிஜென்ஸி நட்சத்திர ஹோட்டலில் வெவ்வேறு ஷிஃப்ட்களில் வேலை செய்துவந்த செக்யுரிட்டி காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக ஹோட்டல் உயர் அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் 24 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அவர்கள் லொயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். செக்யூரிட்டி காவலர்கள் ஹோட்டலைச் சுற்றி வருவதாகவும், அவர்கள் பிரதான வளாகத்துக்குள் வரவில்லை என்பதால் ஹோட்டல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த ஹோட்டலில் வெளிநாட்டினர் உள்பட விருந்தினர்கள் பலர் தங்கியுள்ளனர். இது குறித்த ஊடகங்களின் கேள்விக்கு ஹயாத் ஹோட்டல் அளித்த பதிலில், வந்தே பாரத் திட்டம் விமானங்களைப் பெறுபவர்களுக்கு ஹோட்டல் திறந்திருப்பது தெரியவந்தது. ஹோட்டல் ஓய்வு விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக திறந்திருக்கவில்லை என்று கூறிய ஹோட்டல் ஊழியர்கள், வந்தே பாரத் மிஷன் விமானங்களில் சென்னைக்கு வரும் நபர்கள் தங்க அனுமதிப்பதாகக் கூறினார்கள். அப்படி, தங்க வருபவர்கள் 7 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment