Advertisment

சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sub urban train

தாம்பரத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையவில்லை. அதனால், சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையில் புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக புறநகர் சேவை ஆயிரக் கணக்கான பயணிகள் போக்குவரத்தைக் கையாள்கிறது.

சென்னையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் 2-ம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தாம்பரத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையவில்லை. அதனால், சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதாவது, சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் சேவை மாற்றம் வரும் 14-ம் தேதி வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் - தாம்பரம், விழுப்புரம் - மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் - சென்னை கடற்கரை ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment