Advertisment

சென்னை மின்சார ரயில் சேவை நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
chennai train timings

Chennai sub urban train service partially cancelled on August 22 Thursday

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்டிரல்- திருத்தணி இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரயில், சென்னை சென்டிரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment