செங்கல்பட்டில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்கள் 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேலைகளில் கால தாமதமாக புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் காட்டாங்கொளத்தூர் - சிங்கப்பெருமாள்கோயில் இடையே 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மூன்றாவது லைன் இணைப்பு பணிகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் காலதாமதமாகவே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
ரயில்கள் ரத்து : இந்த பணிகளின் காரணமாக, செங்கல்பட்டிலிருந்து காட்டாங்குளத்தூர் - கூடுவாஞ்சேரி செல்லக்கூடிய குறிப்பிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. காட்டாங்குளத்தூர் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.