Advertisment

சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் - மாற்றத்துக்கு ரெடி ஆகிக்கோங்க மக்களே

Chennai suburban train : செங்கல்பட்டில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்கள் 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேலைகளில் கால தாமதமாக புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chennai suburban train, maintenance works, southern railway, railway line upgradation, suburban train time changes, chennai train, chengalpattu, chennai beach

chennai, chennai suburban train, maintenance works, southern railway, railway line upgradation, suburban train time changes, chennai train, chengalpattu, chennai beach, சென்னை, சென்னை புறநகர் ரயில், பராமரிப்பு பணிகள், தெற்கு ரயில்வே, ரயில் நேரம் மாற்றம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை

செங்கல்பட்டில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்கள் 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை மற்றும் மாலை வேலைகளில் கால தாமதமாக புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் காட்டாங்கொளத்தூர் - சிங்கப்பெருமாள்கோயில் இடையே 17ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மூன்றாவது லைன் இணைப்பு பணிகள் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் காலதாமதமாகவே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

ரயில்கள் ரத்து : இந்த பணிகளின் காரணமாக, செங்கல்பட்டிலிருந்து காட்டாங்குளத்தூர் - கூடுவாஞ்சேரி செல்லக்கூடிய குறிப்பிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. காட்டாங்குளத்தூர் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment