/tamil-ie/media/media_files/uploads/2022/08/mayor-priya-16614043823x2-1.jpg)
தலைமை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு
Chennai Tamil News: தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியாவை கடுமையாக பேசினார் என சர்ச்சை வெளியானது.
அதற்கு மேயர் பிரியா பதிலளித்துள்ளதாவது:
"மாண்புமிகு அமைச்சர் ஒருங்கிணைத்த செய்தியாளர் சந்திப்பில், கார்பரேஷன் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை கூறினோம். எப்போதும் செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைக்கும் அவர், அன்று என்னை பேச சொன்னார். அதை நான் உறுதி செய்துகொள்ள மீண்டும் கேட்டேன்.
அது இயல்பான உரையாடல் மட்டுமே, அவர் என்னிடம் கடுமையாக பேசவில்லை. அவர் என்னை தன்னுடைய மகள் போல நடத்துகிறார்.
ஒரு உரிமையில் பேசுவதாக தான் நான் நினைக்கிறேன். எங்கள் துரையின் அமைச்சரான கே.என்.நேருவின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
நான் பணியமர்ந்த நாளில் இருந்து இன்று வரை, எந்த ஒரு வினவலை சென்னை மாநகராட்சியின் சார்பாக நான் முன்னெடுத்து வைத்தாலும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.