Advertisment

விரைவில் மதுரவாயல்-துறைமுகம் சாலை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா?

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு நான்கு வழிச்சாலை ஜனவரிக்குள் திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகின்றன.

author-image
WebDesk
New Update
விரைவில் மதுரவாயல்-துறைமுகம் சாலை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா?

சென்னையில் புதிய நான்கு வழிச்சாலை: துறைமுகம்-மதுரவாயல் இணைக்கும் புதிய திட்டம்

Chennai Tamil News: சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயலுக்கும் இடையே ரூ.5,855 செலவில் கட்டப்பட்டுள்ள 20.6 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் திறக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகின்றன.

Advertisment

பிரதம மந்திரியின் 'கதி சக்தி' திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு நான்கு வழிச்சாலையுடன் கூடிய உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அமைப்பதற்கான டெண்டர் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

publive-image

நெடுஞ்சாலையில் உயர்த்தப்பட்ட தாழ்வாரம் நான்கு தொகுப்புகளாக அமைக்கப்படும். இத்திட்டம் முடிவடைய 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை ஆகும் நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள ராணுவ நிலத்தில் NHAI பணியாளர்களுக்கு எனத் தனி குடியிருப்பு கட்டுவதற்கு ஆலோசிக்கின்றனர்.

கடற்படை வீரர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டால் மட்டுமே நிலம் NHAI க்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்பிறகு, கடற்படை வீரர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு NHAI ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

"32 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரண்டு பிளாக்குகள் NHAIயின் மூலமாக கட்டப்படும்" என்று ஆதாரங்கள் TNIE இடம் தெரிவித்தன. ஆனால், கடற்படை நிலத்திற்கு ஈடாக சென்னை துறைமுக அறக்கட்டளை வழங்கிய நிலம் குறித்து கருத்து தெரிவிக்க NHAI அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்திய கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் அவ்விடத்தை தவிர்ப்பது நல்லது என கூறுகின்றனர்.

இரண்டு பிரதமர்களால் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டம், அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியின் போது, ​​நீர்வளத்துறைக்கும் (WRD) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் (NHAI) இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, 2012ல் முதற்கட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டில், அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரான நிதின் கந்த்காரி, 2016 ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து வந்தார்.

திட்டத்தை புதுப்பிக்க 2019 இல் புதிய விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பிறகு, கட்காரி லார்சன் மற்றும் டூப்ரோவிடம் திட்டத்தை இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட தாழ்வாரமாக மறுவடிவமைப்பு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி 2022 மே மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment