சென்னை லிப்ட் விபத்து: தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது

சென்னையில் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
 Chennai Teynampet hyatt regency Lift Accident 2 Arrested Tamil News

சென்னையில் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்​பேட்டை அண்ணா அறி​வால​யம் அரு​கில் பிரபல நட்​சத்​திர விடுதி உள்​ளது. இந்த விடுதியின் பின்​புறம் உள்ள லிஃப்ட் பழுதடைந்து இருந்​த​தால், அதை அகற்ற விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்​தது. இதையடுத்​து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்​துல் காதர் என்​பவர், அந்த லிஃப்டை அகற்று​வதற்​காக, ஷியாம் சுந்​தர்​(34), வினோத் உள்​ளிட்ட ஊழியர்​களை நேற்று விடு​திக்கு அழைத்து வந்துள்ளார் . 

Advertisment

ஷியாம் சுந்​தர் கீழே நின்று கொண்​டிருந்தபோது, வினோத் உள்​ளிட்​டோர், மாடி​யில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்​கினர். அப்​போது, எதிர்​பா​ராத வித​மாக, லிஃப்ட் அறுந்​து, கீழே நின்று கொண்​டிருந்த ஷியாம் சுந்​தர் மீது விழுந்​துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்​திலேயே உடல் நசுங்கி உயி​ரிழந்​தார். 

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த தேனாம்​பேட்டை போலீ​ஸார், ஷியாம் சுந்​தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வி​சா​ரணை நடந்து வரும் நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்துள்ளனர். 

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: