Advertisment

சென்னையில் பெண்களை ஏமாற்றி வளைகுடா நாடுகளுக்கு கடத்திய 3 பேர் கைது

இவர்கள் ஆடம்பர வாழ்க்கை தருவதாக கூறி, அந்த பெண்ணை வெளிநாட்டு ஓட்டல்களில் நடனமாட கட்டாயப்படுத்தி உள்ளனர். ஒரு சில பெண்கண் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Chennai

Chennai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களுக்கு வேலை தேடி வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில், ஒரு பெண் உட்பட மூன்று பேரை சென்னை போலீசார் (ITPU பிரிவு) கைது செய்தனர்.

Advertisment

திரும்பி வந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.பிரகாஷ் ராஜ் (24) தென்காசியைச் சேர்ந்த கே.ஜெயக்குமார் (40) மற்றும் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.ஆஃபியா (24) ஆகிய மூவரையும் கைது செய்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்கள் ஆடம்பர வாழ்க்கை தருவதாக கூறி, அந்த பெண்ணை வெளிநாட்டு ஓட்டல்களில் நடனமாட கட்டாயப்படுத்தி உள்ளனர். ஒரு சில பெண்கண் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வெளிநாட்டு வேலைக்கான விளம்பர பிரசுரங்கள், கையொப்பமிட்ட கடன் ஆவணங்கள், பெண்களிடம் பெறப்பட்ட ஒப்பந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment