Advertisment

விஜயவாடா ரயிலை விட நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு அமோக வரவேற்பு: நிமிடங்களில் முடிந்து போன ரிசர்வேஷன்

விஜயவாடா ரயிலை விட சென்னை - திருநெல்வெலி வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Tirunelveli to Chennai Vande Bharat Train Ticket Price

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து ரிசர்வேஷன் முடிந்துபோனது. அதே நேரத்தில் விஜயவாடா ரயிலுக்கான டிக்கெட்டுகள் இன்னும் கிடைக்கின்றன. இதன் மூலம், விஜயவாடா ரயிலை விட நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு ரயில் பயணிகள் இடையே அமோக வரவேற்பு பெறுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisment

சென்னை -திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். 

திங்கள்கிழமை தொடங்க உள்ள சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. அதே போல, ஆனால் விஜயவாடாவிற்கான டிக்கெட்டுகள் மாலை வரை கிடைத்தன.

சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ் பிரஸ் ரயில் 7 ஏசி நாற்காலி பெட்டிகள் மற்றும் ஒரு எக்சிகியூட்டிவ் நாற்காலி கார் பெட்டி கொண்ட ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வழக்கமாக சேவைகள் மறுநாள் தொடங்கும்.

திங்கட்கிழமை, சென்னை-திருநெல்வேலி ரயிலின் ஏசி ஏ.சி சேர் கோச் மற்றும் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கோச்களுக்கான முன்பதிவு காத்திருப்புப் பட்டியலில் 3 உள்ளது. வந்தே பாரத் ரயில் சென்னை - திருநெல்வேலி இடையேயான தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து செல்லும். இது மற்ற வழித்தடங்களில் செல்லும் ரயில்களை விட வேகமாக செல்லும். மீதமுள்ள வாரத்திற்கான காத்திருப்புப் பட்டியல் 44 முதல் 50 வரை உள்ளது. அடுத்த திங்கட்கிழமை முதல் இருக்கைகள் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை வரை பெரும்பாலான நாட்களில் 70-100 இருக்கைகள் கிடைக்கும், புதன்கிழமை தொடங்கும் முதல் ரயிலுக்கு மக்கள் இன்னும் முன்பதிவு செய்யவில்லை. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

“தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் வசித்து வருவதால் அவர்கள் இந்த சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலால் பயனடைவார்கள். வந்தே பாரத் ரயில் ஆம்னி பேருந்துகளை விட கட்டணம் குறைவானது. வசதியானது மற்றும் பாதுகாப்பானது. ரயிலின் உட்புறம் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா தெரிவித்துள்ளார்.

திருப்பதிக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக இருக்கும் ரேணிகுண்டா வழியாக சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயிலில் திங்கள்கிழமை தொடங்கும் முதல் சேவையில் இருந்து பெரும்பாலான நாட்களில் 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன.

சூலூர்பேட்டைக்கு பதிலாக ரேணிகுண்டா வழியாக ஒரு சுற்றுப்பாதை இருப்பதால் வந்தே பாரத் ரயில் விஜயவாடா செல்ல 6 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். வெவ்வேறு நாட்களில் சென்னையில் இருந்து காலை 6 மணி முதல் 6.30 மணி வரை புறப்படும் துரந்தோ, ராஜ்தானி, கரிப் ரத் விரைவு ரயில்கள் விஜயவாடாவை 5 மணி 30 நிமிடங்களுக்குள் சென்றடைவதால், சென்னையில் புறப்படும் நேரம் காலை 5.30 என்பது மற்றொரு குறை ஆகும்.

இதனால், விஜயவாடா ரயிலை விட சென்னை - திருநெல்வெலி வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இதை, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது உறுதிப்படுத்துகிறது. 

Vande bharat Trian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment