சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் சேவை, பராமரிப்புப் பணியின் காரணமாக வருகின்ற ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர்கள் கூறியதாவது:
"சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ‘கோவை விரைவு ரயில்’ (வண்டி எண்.12675) 2023, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில், காலை 7.10 மணிக்கு செல்லும் ‘சதாப்தி விரைவு ரயில்’ (வண்டி எண்.12243) ஜனவரி 4ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் 'கோவை விரைவு ரயில்' (வண்டி எண்.12676) 2023, ஜனவரி 3, 4 தேதிகளிலும், மாலை 3.05 மணிக்கு செல்லும் ‘சதாப்தி விரைவு ரயில்’ (வண்டி எண்.12244) ஜனவரி 4-ஆம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
சேலத்தில் இருந்து அரக்கோணத்துக்கு மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில் டிசம்பர் 26, 27 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் காட்பாடி வரை இயக்கப்படும். காட்பாடி முதல் அரக்கோணம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்திலிருந்து சேலத்துக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் காட்பாடியில் இருந்து புறப்படும். அரக்கோணம் முதல் காட்பாடி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.