Advertisment

அடுத்த 2 நாட்கள் சென்னையை வெளுத்து வாங்க இருக்கும் மழை...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை வானிலை மையம், மழை

சென்னை வானிலை மையம்

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை முடிந்து விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, நாளை என கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தாமதித்து வருகிறது.

வானிலை நிலவரம்

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வலுப்பெற இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றார்.

சென்னை பொறுத்தவரை, இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்றும், இன்று பகல் நேரத்தில் மிதமான வெயில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கன மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment