கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஏப்ரல் 5ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு வந்தே பாரத் ரயில் (06057) , மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு வந்தே பாரத் ரயில் (06058), இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்நிலையில் இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“