வருகின்ற நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 4 முதல் 10 வரை புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லெசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
தேனி, திண்டுகல், நீலகிரி மாவட்டங்களில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. ஜனவரி 6ம் தேதி கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி. விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நேற்றைய தினத்தில் சென்னை மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. ஜனவரி 7ம் தேதியில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ரானிபேட்டை திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜனவரி 8ம் தேதி திருவள்ளூரில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி புயல் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வரை வீசும். 55 கி.மீ வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6.45 மணிக்கு வெளியான அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில், சென்னையின் நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 18.66 மில்லி மீட்டர் மழையும், கோவையிக் 9 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 5.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“