கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயிவே தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து ஏப்.11, 18, 25, மே.2, 9, 16, 23,30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், மறுமார்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 12, 19, 26 மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை வந்தடையும்
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருச்சி, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“