/indian-express-tamil/media/media_files/gPHpOi1WRVPAP6nCSjkO.jpg)
சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து லாரி மோதி விபத்து
சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து நெல்லூர் அருகே விபத்துக்குள்ளானதில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னை வடபழனியில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று 23 பயணிகளுடன் ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஆந்திரா மாநிலம் நெல்லூர் காவலி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக லாரியின் ஓட்டுநர் வலதுபுறமாக திருப்பியபோது எதிரே வந்த சுற்றுலா பேருந்து மீது அதிபயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணமடைந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.