இந்தியாவில் முதல்முறையாக 'ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தயம்'- சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு வேளையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு வேளையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai traffic

Chennai Traffic Diversion

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தயம்தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.

Advertisment

இந்தப் பந்தயம் டிசம்பா் 9, 10 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் நிலையில், தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் பந்தய சுற்றுகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ.17) தொடங்கி டிச.1-ஆம் தேதி வரை இரவு மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, கொடி மரச் சாலையில் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

Advertisment
Advertisements

அந்த வாகனங்கள் ரிசா்வ் வங்கியின் சுரங்கப்பாதை, பாரிமுனை சென்று, அங்கிருந்து தங்களது இலக்கை நோக்கி செல்லலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

அண்ணா சாலையில் பல்லவன் சாலை சந்திப்பு முதல் மன்றோ சிலை வரையிலும், சுவாமி சிவானந்தா சாலையில் பெரியார் சிலை முதல் நேப்பியா் பாலம் வரையிலும், காமராஜா் சாலையில் நேப்பியா் பாலம் முதல் போர் நினைவிடம் வரையிலும் சாலை குறுக்கலாக்கப்படும்.

 இந்த வழியாக வாகனங்கள் வழக்கம்போல செல்ல அனுமதிக்கப்படும். ஆனால் இந்தச் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: