போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை, மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் செல்ல தாம்பரம் மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
வண்டலுார் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில், கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் அதிக அளவில் உள்ளன. இந்த சாலையில், கனரக வாகனங்கள் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமாகவும் செல்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா சிக்னலில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில், காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, தாம்பரம் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக, கூடுவாஞ்சேரி போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“