நோ- என்ட்ரியில் நுழைந்தால் ரூ1100 அபராதம்: சென்னை போலீஸ் அதிரடி

Tamil Nadu News: சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்கள் ரூ.1,100 அபராதம் கட்டவேண்டும் என்று சென்னை போலீஸ் அறிவித்துள்ளனர்.

Tamil Nadu News: சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்கள் ரூ.1,100 அபராதம் கட்டவேண்டும் என்று சென்னை போலீஸ் அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Chennai News Live,Chennai

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு 1100 ருபாய் அபராதம்.

Tamil Nadu News: சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்கள் ரூ.1,100 அபராதம் கட்டவேண்டும் என்று சென்னை போலீஸ் அறிவித்துள்ளனர்.

Advertisment

போக்குவரத்து சூழலில் சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்கள் ஏராளமானோர் தென்படுகின்றனர். இதனால்  போக்குவரத்தில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விதிகளை மீறுவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பது போக்குவரத்து பிரிவுக்கு தெரியவந்துள்ளது. 

publive-image

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் இ -சலான் மூலம் அபராதம் கட்டலாம் என்று 2011 ஆம் ஆண்டு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் இந்த திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisment
Advertisements

சமீப காலத்தில், கியூஆர் கோடு முறையில் அபராதம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளனர். 

முக்கியமாக கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்,  சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஓட்டுனர்கள் மீது அதிக அளவில் வழக்கு பதியப்படுகிறது.

இந்த சாலை விதிமுறைகள் மீறலுடன், தவறான பாதியில் வாகனம் ஓடுவது போக்குவரத்து நெரிசலையும், சாலை விபத்துக்களையும் அதிகரிக்கிறது.

ஆனால் சாலையில் தவறான பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.100 மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டது. 

இதனால் வாகன ஓட்டிகள் இந்த தவறை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வருகிறது. இதையடுத்து மோட்டார் வாகன சட்டம் புதிய திருத்தத்தின்படி தவறான பாதையில் பயணிப்பவர்களுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இந்த முடிவின்படி திங்கட்கிழமை முதல் தவறான பாதையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திங்கட்கிழமை மட்டும் 1,300 வாகன ஓட்டிகள் காவல் துறையிடம் அபராதம் காட்டியுள்ளனர். சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: