/indian-express-tamil/media/media_files/2025/09/11/chennai-traffic-violation-fine-vehicle-insurance-renewal-police-new-rule-2025-09-11-11-15-23.jpg)
Chennai traffic violation fine vehicle insurance renewal police new rule
சென்னை: வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னை மாநகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை ₹300 கோடி வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, சென்னை காவல்துறை காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னையில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துவரும் நிலையில், போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்த, காவல்துறை நேரடி அபராதம் மட்டுமின்றி, அதிநவீன கேமராக்கள் மூலமாகவும் வாகன ஓட்டிகளைக் கண்காணித்து அபராதம் விதித்து வருகிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை காவல்துறை கருவிகள், பேடிஎம் செயலி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் செலுத்த முடியும். ஆனால், பல வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை பல ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் ₹300 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகை நிலுவையில் உள்ளது.
இந்த மாபெரும் தொகையை வசூல் செய்யும் நோக்கில், சென்னை மாநகர காவல்துறை இந்த புதிய நடைமுறையை எடுத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.