Advertisment

6-ம் தேதி சென்னையில் இந்த ஏரியாக்களில் குடிநீர் சப்ளை: மெட்ரோ வாட்டர் முக்கிய அறிவிப்பு

இந்த மண்டலங்களுக்கு வழக்கமாக தண்ணீர் வழங்கும் மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலை பராமரிப்பில் இருப்பதால் இந்த மாற்றம் என சென்னை மெட்ரோவாட்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
chennai metrowater

சென்னை மண்டலம் 1 முதல் 4 வரையிலான பகுதிகளுக்கு புழல் பகிர்மான நிலையத்தில் இருந்து ஜூலை 6ஆம் தேதி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மண்டலங்களுக்கு வழக்கமாக தண்ணீர் வழங்கும் மீஞ்சூர் உப்புநீக்கும் ஆலை பராமரிப்பில் இருப்பதால் இந்த மாற்றம் என சென்னை மெட்ரோவாட்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூரில் உள்ள 100 எம்.எல்.டி., உப்புநீக்கும் ஆலையில் வியாழன் காலை 9 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என மெட்ரோவாட்டர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூர், மணலி, மாதவரம், கத்திவாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, புழல் குடிநீர் விநியோக நிலையத்தில் மாற்று வழியில் குடிநீர் வழங்கப்படும்.

கூடுதல் குடிநீர் தேவைப்படும் குடியிருப்பாளர்கள் இணையதளங்களில் டேங்கர்களை முன்பதிவு செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Water
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment