Tamil Nadu news today live updates: சில நாட்களுக்கு கடும் உயர்வை சந்தித்த தங்கத்தின் விலை தற்போது சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது . உதாரணமாக, இன்று சென்னையில் 8 கிராம் தங்கம் ரூ 224 குறைந்து ரூ 28,672-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று, 8 கிராமின் தங்க விலை ரூ.28896.00 இருந்தது குறிப்பிடத் தக்கது.
இன்று, சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு எட்டு பைசா உயர்ந்து 74.78 என்ற கணக்கில் விற்கப்படுகிறது. டீசல் பத்து பைசா அதிகமடைந்து 69.09 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
புதிய மோட்டார் வாகனச் சட்டம்: இந்த மாநிலங்கள் மக்களின் எதிர்ப்பை தவிர்க்க அபராதங்களைக் குறைத்தன...
இந்தி மொழியின் வரலாரையும், அதன் சமூக-அரசியல் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபை செப்.14 ,1949-ல் இந்தியை இந்தியாவின் ஒரு அதிகாரப் பூர்வ மொழியாக அறிவித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், விவரங்களுக்கு இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் சமூக நிகழ்வுகள் . அரசியல் நிலவரங்கள், மற்றும் அன்றாட தகவல்களை இங்கே காணலாம்.
"நீர் மேலாண்மை குறித்த துரைமுருகன் கருத்து வேடிக்கையாக உள்ளது. திமுக ஆட்சியில்தான் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழக உரிமைகள் தாரை வார்க்கப்பட்டது. காவிரியின் குறுக்கே 5 அணைகள் கட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. 200 கோடி ரூபாய் செலவில தயாராகி வரும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. முதல் பாகத்தில் வரும் இளம்வயது கமலின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் நல்லவராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி வேகமாக நடத்தி முடிக்க படக்குழுவை கமல் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.
இலங்கையில் நடைபெற்று வந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிபோட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி வங்கதேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது, ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், நேர்த்தியாக பந்து வீசி 101 ரன்களில் வங்கதேசத்தை ஆல் அவுட் செய்தனர். இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.
இந்தி மட்டும் எப்படி
இந்தியாவை இணைத்து விட முடியும்?
என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.
இந்தி மட்டும் எப்படி
இந்தியாவை இணைத்து விட முடியும்?— வைரமுத்து (@vairamuthu) September 14, 2019
லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். பேனர் விழுந்து தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் , கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் மருத்துவர் என கூறி பேஸ்புக் மூலம் பழகியுள்ளார். மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் மூலம் பெண்ணை ஏமாற்றிய கார்த்திக், சொந்தமாக மருத்துவமனை வைத்திருப்பதாகவும் கூறி பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இவர்களது காதல் திருமணம் வரை செல்ல, சந்தர்பத்தை பயன்படுத்திகொள்ள நினைத்த கார்த்திக் பெண் வீட்டாரிடம் 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் வரதட்சணையாக பெற்றதாக தெரிகிறது.
இது மட்டுமில்லாமல், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும், 75 ஆயிரம் ரூபாய் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் கார்த்திக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக் வெறும் 2 ஆண்டுகள் மட்டும் மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு கோவையில் மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
சினிமா பாணியில் ஃபேஸ்புக் மூலம் பெண்ணை ஏமாற்றிய நபர்#Chennai https://t.co/G79zcmBkzZ
— Thanthi TV (@ThanthiTV) September 14, 2019
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் அந்த புகைப்படத்தை சாதரணமாக தான் பதிவிட்டேன். அந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டி. ஆனால் நான் பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் வேறுமாதிரி புரிந்து கொண்டனர். இதன் மூலம் சமூக வலைதள உலகில் மிகப் பெரிய பாடத்தை நான் கற்று கொண்டேன்.
தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலவித சாதனைகளை படைத்துள்ளார். அவர் எப்போதும் கிரிக்கெட்டை பற்றி தான் யோசித்து கொண்டிருப்பார். ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. இது தொடர்பாக யாரும் எந்த வித கருத்தும் தெரிவிக்க வேண்டாம்“ என்றார்.
ஒரே மொழியாக இந்தியை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்து ஏற்புடையதல்ல.
தமிழ் உள்ளிட்ட மொழிகள் நிறைந்த தேசத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 18 ஆயிரத்து 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி நான்கு ஏழு டிஎம்சியாகவும் இருக்கிறது.
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி பழவேற்காடு ஏரியில் மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது . இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையால் பழவேற்காடு ஏரியில் தற்காலிக தூர்வாரும் பணி நடக்கிறது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல்துறை ஆய்வு நடத்த வருவது மகிழ்ச்சி என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 மற்றும் 12-ம் வகுப்பு பாட திட்டங்களில் மிகப்பெரும் மாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 மற்றும் 12- ம் வகுப்புகளில் 6 பாடங்களை 5-ஆக குறைக்க முடிவு என்பது தான் அந்த தகவல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறைகள் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்திக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக வரும் 19-ம் தேதி அனைத்து பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்களை நீக்க புதிய திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன. நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்தி திணிப்பை நிச்சயம் எதிர்ப்போம் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்படவில்லை என்று கூறினார். தமிழக மக்களிடம் இந்தியை திணிக்க் அரசு முயற்சித்தால் அதை எதிர்க்க திமுக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தங்கம் விலை சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆபரண தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.கடலூர், விழுப்புரம், தி.மலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணிணி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில் உயர் வகுப்பில் படிக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த மடிக்கணிணி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணிணி வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அறிவிப்பிற்குக் கண்டனம்:
மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தும் முடிவைக்
கைவிட வலியுறுத்தல்! pic.twitter.com/pJb3fFz6su— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 14, 2019
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடத்தவிருக்கும் பொதுத்தேர்வை தான் கடுமையாக எதிர்ப்பதாக அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இது கூடுதல் சுமையையும், மன வேதனையும் ஏற்படுத்தும் என்றும் கருத்து.
हिंदी दिवस पर आप सभी को बहुत-बहुत बधाई। भाषा की सरलता, सहजता और शालीनता अभिव्यक्ति को सार्थकता प्रदान करती है। हिंदी ने इन पहलुओं को खूबसूरती से समाहित किया है।
— Narendra Modi (@narendramodi) September 14, 2019
இந்தி தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் நெறிமுறைகளால் ஒரு மொழி தனக்கான அர்த்தத்தைத் தேடிகொள்கிறது. இந்த மூன்று அம்சங்களையும் இந்தி அழகாக இணைத்துள்ளது என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் மத்தியில் இந்தியா என்ற அடையாளத்தை உருவாக்க ஹிந்தி என்ற ஒற்றை மொழியை பிரதானப் படுத்தவேண்டும் என்ற அமித் ஷா வின் கருத்துக்கு சுப.வீரபாண்டியன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது மாநில சுயாட்சிக்கு எதிரான ஒன்று , ஒற்றுமை இந்தியாவை உடைக்க நினைக்கிறார்கள். இவர்களிடம் இது எதிர் பார்த்த ஒன்று தான், என்று கூறியுள்ளார்.
சந்திரயான் 2 இந்தியாவும், இஸ்ரோ சிவனும் அபார வெற்றிபெற்றுள்ளனர் இதில் கருத்து இல்லை. பேனர் கலாச்சாரம் தேவையில்லாதது என்பது தான் தனது கட்சியின் நிலைப்பாடு என்று ம் தெரிவித்தார்.5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வு வைப்பது நல்ல விஷயம். அப்போது தான் மாணவர்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு வரும், ஆனால் இந்த தேர்வால் அவர்களின் படிப்பு பாலாகி விடக்கூடாது என்ற கருத்தையும் முன்வைத்தார்.
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019
இன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். சிறகு நேரம் கழித்து, பாகிஸ்தான் ராணுவ வீர ஒருவர் வெள்ளைக் கொடியை ஏந்திய படி இரண்டு ராணுவ வீரர்களின் உயிரை மீட்டு சென்றார்
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (@AmitShah) September 14, 2019
இந்தியாவில் வெவ்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும் , உலக நாடுகளில் மத்தியில் இந்தியா என்ற அடையாளத்தை உருவாக்க ஒற்றை மொழியை பிரதானப் படுத்துவது மிகவும் முக்கியம். இன்று, அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியை இந்திய நாட்டின் ஒரே மொழியாய் இருக்க வேண்டும் என்று அமித் ஷா ஹிந்தி திவாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார் .இந்தியா அரசியலைமைப்பு சபை ஹிந்தியை இந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழியாய் ஏற்றுக் கொண்ட இந்நாளை ஹிந்தி திவாஸ் என்ற பெயரில் கொண்டாடுவது வழக்கம்.
புதுவையில் இந்தியத் திரைப்பட விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடந்து வருகிறது . சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'பரியேறும் பெருமாள்' படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது நேற்று வழங்கப்பட்டன. மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியானது இந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்.
#WATCH BJP President Amit Shah with working president JP Nadda and leaders Vijay Goel and Vijender Gupta sweeps the floor in AIIMS as part of the party's 'Seva Saptah'campaign launched to celebrate PM Modi's birthday pic.twitter.com/1bO0nzGgoU
— ANI (@ANI) September 14, 2019
செப்டெம்பர் 17 பிறந்த நாள் காணும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொண்டாடும் வகையில் பாஜக சேவை வாரம் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜே.பி. நடா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் இந்த சேவை வாராத்தை (செப் 14-20 ) தொடங்கி வைத்தனர்.
சென்னை சவுகார்பேட்டையில் வீரப்பன் தெருவில் அமைந்துள்ள நகை பெட்டி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உயிர் சேதம் ஏதும் இல்லை என்று அங்கிரந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன . மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோமா எண்டர்பிரைசஸ் துணைத் தலைவர் பி.ஆர்.ராவ் என்பவரை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தது. நிறுவனத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள விசாரணையை தனக்கு சாதமாக மாற்றுவதற்காக சிபிஐ டிஐஜி தரவரிசை அதிகாரிக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட நடவடிக்கைகாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு முன்பாக சரணடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights