Chennai weather forecast news in tamil: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 12) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 12) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:
Tamil nadu rain news- இன்றைய வானிலை அறிக்கை
tamil nadu weather news: வானிலை அறிக்கை
சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரிக்கு அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை:
12-07-2019: தமிழ் நாட்டின் தென் மாவட்டங்கள், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை
13-07-2019: தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை
14-07-2019: தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை
15-07-2019: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் லேசான மழை
16-07-2019: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் லேசான மழை
திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஜூலை 12-ம் தேதி கனமழை இருக்கலாம். 14-ம் தேதியும் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.
chennai rains: சென்னை வானிலை
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மிதமான இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையும் மேற்படி நிலையே தொடரும்.
இதற்கிடையே சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வட - தென் தமிழகம், வட தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.