weather forecast, chennai weather, chennai weather news, chennai weather news today, வானிலை, சென்னை வானிலை
Chennai weather news today: தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று துவங்கி இதே வானிலை 02ம் தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தம்மிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 2 வரை சென்னையில் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், மழையை மக்கள் கொண்டாடலாம்.
Advertisment
chennai weather news: பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை, சிதம்பரம், திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர். திருச்சி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். அரியலூர், திருச்சி மாவட்டங்களைத் தொடர்ந்து காலை 08 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
Advertisment
Advertisements
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
தாம்பரத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அரியலூரின் ஜெயம்கொண்டம் பகுதியில் 10 செ.மீ மழையும், காஞ்சியின் ஸ்ரீபெரும்புதூரில் 9 செ.மீ மழையும், கடலூரில் கே.எம்.கோவில் பகுதியில் 8 செ.மீ மழையும், நாகையின் சீர்காழியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. நாகையின் மயிலாடுதுறையில் 6 செ.மீ மழையும், சிதம்பரம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்தார் சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன். மேலும் சூறாவளி காற்று வீச இருப்பதால் 2 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல் பகுதிக்கும், நாளை மாலத்தீவு கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.