Chennai weather today interior Tamil Nadu receives heavy rainfall alert : சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும், ப்ரதீப் ஜான் போன்ற தனியார் வானிலை கணிப்பாளர்களும் நமக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்த நிலையில் இன்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
மேலும் படிக்க : சென்னையில் மழையா? பள்ளி கல்லூரிகளுக்கு முன்னேற்பாடுகளுடன் செல்லுங்கள்
நேற்று அதிகபட்சமாக பதிவாகிய மழையின் அளவு
நேற்று உள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி. சிவகங்கையின் தேவக்கோட்டை, தர்மபுரியின் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விருதுநகரின் ஸ்ரீவில்லிபுதூர், புதுக்கோட்டையின் ஆலங்குடி, மற்றும் தர்மபுரி பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லையின் பாளையங்கோட்டை, சிவகங்கையின் காரைக்குடி, திருச்சியின் மருங்கபுரி, கிருஷ்ணகிரியின் பாரூர் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவையின் வால்பாறை மற்றும் தர்மபுரியின் ஹொகேனக்கல் பகுதியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று கனமழை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகள்
இன்று வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையில் இருந்து மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்த பட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும். தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் அறிக்கையின் படி இன்று காலை சென்னையில் பெய்த மழையின் நிலவரம்
அளவீடுகள் எம்.எம்.-களில்
டிஜிபி அலுவலகம் - மெரினா கடற்கரை - 63
தொண்டியார்பேட்டை - 29
பாரிஸ் - 24
சோழிங்கநல்லூர் - 20
திருத்தணி - 13
செங்குன்றம் ஏரி - 13
அண்ணா பல்கலைக்கழகம் - 11
சத்யபாமா பல்கலைக்கழகம் - 10
பள்ளிப்பட்டு - 10
கே.கே. நகர் - 8
பெரம்பூர் - 8
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (கேளம்பாக்கம்) - 8
மாதவரம் - 7
நுங்கம்பாக்கம் - 6
அயனாவரம் - 6
மீனம்பாக்கம் - 5
ஆலந்தூர் - 5
சோழவரம் - 5
பூந்தமல்லி - 5
மதியம் 1 மணிக்கான வானிலை அறிக்கை
தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.