Chennai weather today southwest monsoon latest updates Avalanchi received 41 CM rain : உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடந்த நான்கு - ஐந்து நாட்களாகத்தான் தென்மேற்கு பருவமழை அதிதீவிரம் பெற்றுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்திருக்கும் மாவட்டங்களில். வால்பாறை, கோவை, நீலகிரி என கனமழை பஞ்சமில்லாமல் கொட்டிவருகிறது. ஏற்கனவே பில்லூர் அணை நிரம்பிய நிலையில், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் எப்போது வேண்டுமானாலும் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai weather today southwest monsoon latest updates Avalanchi received 41 CM rain
கோவையின் ரேஸ் கோர்ஸ், ஈஷா யோகா மையம் ஆகிய பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நொய்யல் ஆற்றில் நீர் வரத்திற்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்த மழையால் சேகரிக்கப்பட்ட நீர் அடுத்த கோடையையும் தாங்கும் என்று கோவை வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி இன்று மற்றும் நாளை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கோவையின் வாளையாறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
அவலாஞ்சி - 41 செ.மீ மழை பதிவு
மேல் பவானி (நீலகிரி) - 22 செ.மீ
நடுவட்டம் (நீலகிரி) - 12 செ.மீ
சின்னக் கல்லாறு மற்றும் வால்பாறை (கோவை) - 11 செ.மீ
ஜி. பஜார் (நீலகிரி) - 10 செ.மீ
கீழ்கோதையாறு (குமரி) - 9 செ.மீ
பெரியாறு (தேனி) - 8 செ.மீ
ஊட்டி (நீலகிரி) - 7 செ.மீ
மேலும் நெல்லை, தென்காசி, நாகை, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்துவாங்கியுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் படிக்க : Chennai Weather Forecast: தமிழகத்தில் 10-ம் தேதி வரை மிதமான மழை
Karnataka Rains : உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
கொங்கன் பெல்ட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. உபரி நீர் அதிக அளவு தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. ஒரே விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் கர்நாடக அணைகளில் இருந்து தற்போது தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 21 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 19 ஆயிரம் கனஅடி நீராக அதிகரிப்பு.
நெல்லை பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 28 அடியும் உயர்ந்துள்ளது.