chennai weather today : சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தால் சென்னையில் வழக்கத்தை விட வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
சென்னையில் கிண்டி, ராமாபுரம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல் மீனம்பாக்கம், மடிப்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. விழுப்புரம் மாவட்டத்திலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
Chennai Weather News today
tamilnadu weather man : தமிழ்நாடு வெதர்மேன்!
இந்நிலையில், நேற்று இரவு, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ ஸ்ரீஹரிகோட்டாவில் மேகங்கள் ஒன்றிணைவதை பார்க்க முடிகிறது. தற்போது மழை பெய்து வருகிறது மகிழ்ச்சி. இந்த மழை நாளையும் தொடரலாம். மேகங்கள் மழையை உண்டாக்கும் சூழலை பார்க்க முடிகிறது.
சென்னை மக்களுக்கு நாளை(13.7.19) இனிமையான காலை பொழுதாக இருக்கும். புதுச்சேரி மற்றும் கடலூரில் மழைக்கு அதிக வாய்ப்பு. ” என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்து, அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது, “ சென்னையின் வடக்கு பகுதியின் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்னும் 1 மணி நேரத்திற்கு மேலாக கண்டிப்பாக தொடரும்.
மழையினால் சென்னை கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்னும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு.
புதுச்சேரி மற்றும் கடலூரில் புயல் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு படி, சென்னையில் மேலும், சிலநாட்களுக்கு மழை தொடர்ந்தால் சென்னை மக்களுக்கு அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு என்னவாக இருக்கும்.