chennai weather today weather rain : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. நேற்று சில இடங்களில் மழை பெய்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மேலும் 3 நாள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டி இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் புவியரசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேனி, கோபிசெட்டிபாளைம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”